districts

img

பேரம் பேசும் கட்சிகளுக்கு தோல்வியை பரிசாக வழங்கவேண்டும்

 கடலூர், ஏப்.1- கடலூர் மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கடலூரில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்தியா கூட்டணியின் செயல் வீரர்கள்  கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கூட்டத் திற்கு  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. ஐயப்பன், எம். ஆர். ராதா கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி வேட் பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத், முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர்கள் இள. புகழேந்தி, அங்கயர்கன்னி, திமுக மாநகர செய லாளர் கே.எஸ்.ராஜா, மாநகர மேயர் சுந்தரி  ராஜா, காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின்  மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன்,  மாவட்ட தலைவர் திலகர், பொறுப்பாளர் மணிரத்தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநகர செயலாளர் ஆர்.அமர் நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் துரை, துணைச் செயலாளர் குளோப், தமிழக வாழ்வுரிமை கட்சியின் திருமாவளவன், விசிக மக்களவைத் தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாநகர மாவட்டச் செயலாளர் செந்தில், திராவிடர்கழக நிர்வாகி எழிலேந்தி, மக்கள் அதிகாரம் பாலு உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். வேளாண் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசுகையில்,   தேமுதிக உள்ளிட்ட  சில எதிர்க்கட்சிகள் வாக்குகளை ஏலம் விடுகின்றன. சொந்த நலனுக்காக அரசியல்  ஆதாயம் தேடும் பேரம் பேசும் கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் சரியான பாடம்  புகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.