சென்னை, ஆக,12-
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ‘உலக உறுப்பு தான தினமாக’ உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுநீரக பராமரிப்பு மையமாக திகழும் ஆசியன் இன்ஸ்டிடியூட் ஆப் நெப்ராலஜி அன்ட் யூரோலஜி மருத்துவமனை சார்பில் பெசன்ட் நகரில் வாக்கத்தான் நடைபெற்றது.
இந்த வாக்கத்தானை இம்மருத்துவமனையின் மூத்த நிர்வாகிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு உறுப்பு தானம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திச் சென்றனர்.