திருவள்ளூர், டிச.30- நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகள் மற்றும் காவல் நிலையங்கள் ஆகிய மதச்சார் பின்மையை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் திருவள்ளூர் மாவட்ட 4 வது மாநாடு சனிக்கிழமையன்று (டிச 30), கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஷேக் முகமது அனீப் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டத் தலைவர் ெஜ. ஜான்சன் வரவேற்றார். மாவட்ட துணை துணைச் பி.நடேசன், மாவட்ட துணைத் தலைவர் என்.நித்தி யானந்தம், முனைவர் எஸ்.அப்துல்லா, அஜ்மல் கான், அப்துல் ரஹீம், பாஸ்டர். லாரன்ஸ், பாஸ்டர் அலெக்ஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் ஏ.அப்சல் அகமது வேலை அறிக்கையை சமர்ப்பித் தார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் நிறைவு செய்து பேசினார். முகமது சாலி நன்றி கூறினார். நிர்வாகிகள் மாவட்டத் தலைவராக எஸ்.எம்.அனீப், செயலாளராக ஏ. அப்சல் அகமது, பொருளாளராக பி.நடேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீர்மானங்கள் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தடையின்றி வழங்க வேண்டும், மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சி யர் மூலம் குறைகளை கேட்கும் கூட்டத்தை கூட்ட வேண்டும், பட்டியல் இன தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேவாலயங்கள், மசூதிகள் கட்ட மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு வணிக கடன்கள் வழங்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அநியாய மாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும், அடக்கஸ்த லம் கபர்ஸ்தான் தோட்டங்களுக்கு நிலம் வழங்க வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு என்று தனித் துறையை உருவாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.