திருவண்ணாமலை, செப்.2- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 44 ஊராட்சிகளுக்கு தூய்மை பாரதம் 15வது நிதிக்குழு உதவியுடன் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டன. குப்பைகளை அகற்ற 1கோடி 63 லட்சம் மதிப்பீட்டில் 44 ஊராட்சிகளுக்கு மொத்தம் 62 வாகனங்களை ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோவிந்தராஜிலு தலைமையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார் முன்னிலையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி 44 ஊராட்சி மன்ற தூய்மை பணியாளர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் திமுக கட்சி முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்