districts

img

அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

மக்களவைக்கு அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரு கிறது.1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி யாகும் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி  வரைவு வாக்காளர்  பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  வெளியிட உள்ளார். இதில் தேவை யான திருத்தங்கள் செய்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் 2024  ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப் படும்.

பிரதா சாகு தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தை புதனன்று (அக். 25) கூட்டியிருந்தார்.இந்த கூட்டத்தில் ஆர்.எஸ், பாரதி தாயகம் கவி எம்எல்ஏ (திமுக), டி, ெஜயகுமார் (அதிமுக), இன்பதுரை (காங்கிரஸ், பெ.சண்முகம். ஆறுமுகநாயினார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மு,வீரபாண்டியன். ரவீந்திரநாத் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி),  பகுஜன்  சமாஜ் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப் பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு  பணிகள் குறித்து விரிவாக விவாதிக் கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நடை பெற உள்ள மக்களவை தேர்தலுக் காக எடுக்க வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும், அரசியல் கட்சி  பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் எடுத்து கூறினார்கள்.கள்ள வாக்கு களை முற்றிலும் தடுப்பது, வாக் காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். 

வாக்காளர் பட்டியலில் இறந்தவர் களின் பெயர்களை நீக்குவது, போலி வாக்காளர் பெயர்களை கண்ட றிந்து நீக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் வைத்தனர்.இந்த  கருத்துக்களை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கேட்டுக் கொண்டு நடவடிக்கை மேற்கொள்வ தாக உறுதி அளித்தார்.