districts

img

சாலையோர வியாபாரிகளுக்கான விற்பனை பிரதிநிதிகள் தேர்தல்

புதுச்சேரி,ஜன.4- புதுச்சேரி சாலையோர வியாபாரிகளிடம் சிஐடியு வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரி நகராட்சி சார்பில் சாலை யோர வியாபாரிகளுக்கான 12பேர் கொண்ட விற்பனை பிரதிநிதிகள் (வெண்டிங் கமிட்டி) தேர்விற்கான தேர்தல் நடை பெறுகிறது. ஜனவரி 10 ஆம் தேதி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் தேர்தலில்  சிஐடியு புதுச்சேரி மாநில சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 12 பேர் போட்டியிடுகின்றனர். ஏஐடியூசி,ஐஎன்டியூசி உள்ளிட்ட மற்ற தொழிற்சங்கங்கள்  சிஐடியு சங்கத்தை எதிர்த்து ஒரு அணியாக போட்டி யிடுகின்றனர். புதுச்சேரி நகரத்தில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியா பாரிகள் நகராட்சியில் அனுமதி பெற்று வியா பாரம் செய்து வருபவர்களிடம் தினந்தோறும்  புதுச்சேரி மாநில சிஐடியு தலை வர்கள் துண்டு பிரசுரம் கொடுத்து  ஆதரவு திரட்டி வருகின்றனர். உழவர்கரை நகராட்சி ஏற்கனவே உழவர்கரை நகராட்சி சார்பில் வெண்டிங் கமிட்டி தேர்தல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அத்தேர்தலில் சிஐடியு சார்பில்  போட்டி யிட்ட 12 வேட்பாளர்களில் 10 பேர் வெற்றி பெற்றனர்.  பாஜக வை சேர்ந்த ஒரு வரும்,ஏஐடியூசி சார்பில் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டனர். கோரிக்கைகள் சாலையோர வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை புதுச்சேரியில் அமலாக்க வேண்டும்.வியா பாரிகளின் வாழ்வாதாரத்திற்கான  திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான வெண்டிங் கமிட்டி தேர்தல் நடத்த வேண்டும் என்று சிஐடியு தொடர்ச்சியாக போராடி வந்தது. அதன் விளைவாக வெண்டிங் கமிட்டி தேர்தல் உழவர்கரை நகராட்சியின் சார்பில் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து புதுச்சேரி நகராட்சி சார்பில் தற்போது தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.