திருவண்ணாமலை,பிப்.6- திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கால்நடைகள் வளர்த்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். தரைக்காடுகளில் மலைமாடுகளை பராமரித்து, வளர்த்து வரும் விவசாயிகள், சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் மலைமாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவராக சின்ராஜ், செயலாளராக அறிவழகன், பொருளாளராக சண்முகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் காமராஜ், சிபிஎம் நகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.