districts

img

வயது முதிர்ந்த வாக்காளர்கள் கவுரவிப்பு

 கடலூர்,ஏப்.3- கடலூரில் வயது முதிர்ந்த வாக்காளர்கள் செவ்வாயன்று கவுரவிக்கப்பட்டனர். வாக்களிக்கும் விழுக்காட்டை 100ஆக உயர்த்தும் வகையில் 85 வயது முதிர்ந்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  கலந்துகொண்டு மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றுடன் ஒரு தட்டில் சீர்வரிசை பொருட்களுடன் தேர்தல் திருவிழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை மூத்த வாக்காளர்களுக்கு வழங்கினார். இதையடுத்து ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் பழனி, மாநகராட்சி நகர் நல அலுவலர் எழில் மதனா, துப்புரவு ஆய்வாளர் அப்துல் ஜாபர் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.