districts

புதுப்பொலிவு பெறுகிறது எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை,டிச.24- நூற்றாண்டுகள்பழைமை வாய்ந்த சென்னை எழும்பூர் ரயில் நிலையம் புதிய பொழிவு பெற உள்ளது. ரூ 735 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள் உடன் மறு சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன, 144 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் நிலையத்தை ரூ735 கோடி மதிப்பில் உலக தரத்தில் நவீன வசதிகள் உடன் மறு சீரமைப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.   அதன் படி கடந்த ஜூன் மாதம் தெற்கு ரயில்வே சார்பில் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பிரதான முகப்பகுதி, காந்தி இர்வின் சாலை யில் தொடங்கி பின்புற பகுதியான பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் முடி வடைகிறது. இந்த இருபகுதியிலும் ரயில்வே விரிவாக்க மறுசீரமைப்பு பணி கள் நடைபெற்று வருகின்றன.   விமான நிலையத்தில் இருப்பதுபோல பயணிகள் வருகை, புறப்பாடு என தனித்தனியாக பிரிக்க பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து பயணி களும் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் அடுக்கு பார்க்கிங் வசதிகளும் செய்யப்படவுள்ளன. மேலும் பயணிகள் தனித்தனி பகுதிகளில் வந்து சேர மூன்று நடை மேம்பாலங்கள் அமைய உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தனி யார் நிறுவனத்திற்கு இதற்கான பணி கள் வழங்கப்பட்டு 36 மாதத்திற்குள் மறு சீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.