காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2 மகளிர் துணைக்குழு சார்பில் ராமநாதபுரம் திருவொற்றியூர் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் துணைத்தலைவர் ராஜேந்திரன், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் மனோகரன், துளசி, சர்வமங்களா வி.ஜானகிராமன், நாகநாதன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெயராமன், பள்ளி தலைமையாசிரியர் முத்துச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.