districts

img

மருந்து விற்பனை பிரதிநிதிகள் நவ.30 அன்று வேலை நிறுத்தம்

சென்னை, செப்.22- நாடு முழுவதும் நவ.30 ஆம் தேதியன்று அன்று மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி வியாழனன்று சென் னையில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களி டம் சங்கத்தின் தலைவர் சத்தியநாராயணன் கூறுகையில், 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு  குறைந்தபட்ச ஊதியமாக 14 ஆயிரத்து 599 ரூபாய் நிர்ணயித்தது. உச்ச நீதிமன்ற அறிவு றுத்தல் மற்றும் தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 26 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச ஊதியமாக நிர்ணயிக்க வேண்டும்.  மருந்து நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சரிவர பணி நியமன ஆணை வழங்க மறுப் பதை அரசு சரி செய்ய வேண்டும். தொழிலா ளர்களின் அடிப்படை உரிமையான போனஸ், இஎஸ்ஐ போன்றவற்றை வழங்க மறுக்கிற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். பெண் மருத்துவப் பிரதிநிதிகளுக்கு 6  மாத காலம் மருத்துவ விடுப்பு வழங்க அர சாணை வெளியிட வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் அவற்றை முறையாக கணக்கில் செலுத்து வதில்லை. இதனை அரசு கண்காணிக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த கோரிக்கைகளை அரசு நிறை வேற்றாவிடில், மாவட்ட அளவில் போராட் டங்கள் நடைபெறும். மருந்து விற்பனை பிரதி நிதிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி சம் மேளனம் சார்பில் நவ.30 ஆம் தேதியன்று தேசிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற  உள்ளது, என்றார்.  முன்னதாக, இப்போராட் டத்தில் சிஐடியு மாநில துணைப்பொதுச்செய லாளர்கள் எஸ்.கண்ணன், கே.திருச்செல் வன், மாநிலச் செயலாளர்கள் கே.சி.கோபி குமார், சி.திருவேட்டை, துணைத்தலைவர் எம்.சந்திரன், வடசென்னை மாவட்டச் செய லாளர் லெனின் சுந்தர், சங்கத்தின் பொதுச் செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.