districts

img

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை, டிச. 24- திருவொற்றியூர் அரிமா சங்கங்களின் சார்பில் போதைப் பொருள் பயன்படுத்து வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு  மாரத்தான் போட்டி நடைபெற்றது மாரத்தான் போட்டியில் சென்னை மட்டு மின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 7,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தி ருந்தனர்.   ஞாயிற்றுக்கிழமை 3 கி.மீ., 5 கி.மீ. 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளில்  போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டி எண்ணூர் விரைவு சாலை சுங்கச்சாவடியில் இருந்து கே.வி.குப்பம் வரை நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் முதியோர் வரை ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.  போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டன. இதில் அரிமா சங்க நிர்வாகிகள் வி.பஜேந்திரபாபு,  ஏ.டி.ரவிச்சந்திரன், ஆர்.மணி சேகர், என்.துரைராஜ், எஸ்.டி. சங்கர், வி.தியாகராஜன், ஏ.ஞானசேகர், எஸ்.செல்வம், எஸ்.வி.முரு கன், பி.பிரதாப்குமார், ஆர்.பரசுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.