districts

சென்னையில் குடிநீர் வரியும் உயர்ந்தது!

சென்னை, செப்.14- சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் குடிநீர்வரி 7விழுக் காடு உயர்ந்துள்ளது. சொத்துவரியை தொடர்ந்து மின்கட்டணமும் உயர்த்தப்பட்ட நிலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியும் 7 விழுக்காடு  உயர்த்தப்பட்டு உள்ளது. சொத்து வரி உயர்த்தப்படும் போது அதன் அடிப்படை யில் குடிநீர் வரியும் உயர்த்தப்படுவது வழக்கம். சொத்தின் ஆண்டு மதிப்பை கணக்கிட்டு 30 விழுக்காடு வரி உயர்த்தப் பட்டது. இதில் 23 விழுக்காடு சொத்து வரியாக மாநகராட்சி வசூ லிக்கிறது. 7 விழுக்காடு குடிநீர் வரியாக சென்னை குடிநீர் வாரியம் வசூ லிக்கிறது. குடிநீர் வரி உயர்வு கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்து விட்டது.     எப்போ தெல்லாம் சொத்து வரி உயர்த்தப்படுகிறதோ அப்போது குடிநீர் வரியும் உயரும் என்று குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 7.75 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. சொத்துவரி உயர்த்தப்பட்ட அளவில் 7 விழுக்காடு குடிநீர் வரி வசூலிக்கப்படும் என்றனர். உதாரணத்துக்கு ஒருவருக்கு சொத்துவரி ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்ந்து இருக்குமானால் உயர்த்தப்பட்ட ரூ.500-க்கு 7 விழுக்காடு குடிநீர் வரி உயர்வு கணக்கிடப்படும். இது வழக்கமான நடை முறை தான். கடந்த 10வருடத்திற்கு மேலாக குடிநீர் வரி உயர்த்தப்பட வில்லை. 2022-23 நடப்பு ஆண்டிற்கான முதல் அரையாண்டு குடிநீர் வரி தற்போது வசூ லிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.120 கோடி வருவாய் கூடுதலாக கிடைக்கும். உயர்த்தப்பட்ட குடிநீர் வரி குறித்து தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் நுகர்வோருக்கு அனுப்பப் படுவதாகவும் அவர்கள் கூறினர்.

;