districts

சென்னை முக்கிய செய்திகள்

இன்று 3 மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை,நவ.16- சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  சென்னை கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலை யில் உள்ள அஞ்சலக அரு கில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் வெள்ளி, சனிக்கிழமை நடை பெற உள்ளதால் சூளை மேடு நீர் பகிர்மான நிலை யம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலி கமாக நிறுத்தப்பட உள்ளது.  வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் சனிக்கிழமை இரவு 7 மணி வரை அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசர வாக்கம் ஆகிய மண்டலங் களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநி யோகம் நிறுத்தப்படும். தேனாம்பேட்டை மண்ட லத்தில் சூளைமேடு, நுங்கம் பாக்கம், ஆயிரம் விளக்கு, கோபால புரம், தியாகராய நகர், தேனாம்பேட்டை கோடம் பாக்கம் மண்டலத்தில் கோயம்பேடு, சின்மயா நகர், விருகம்பாக்கம், சாலிகிரா மம், வடபழனி, ரங்கராஜ புரம், தியாகராய நகர், மேற்கு மாம்பலம், அசோக் நகர், சிஐடி நகர், வளசர வாக்கம் மண்டலத்தில் தாய்சா அடுக்குமாடி வளா கம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதால், பொது மக்கள் முன்னெச்சரிக் கையாக வேண்டிய அளவு குடிநீர் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள்.  மேலும் அவசரத் தேவை களுக்கு லாரிகள் மூலம் குடி நீர் பெற்றுக்கொள்ள வாரி யத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணைய தள முகவரியை பயன் படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.  குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதி களுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப் படும் குடிநீர் விநியோகம் வழக்கம்போல் மேற்கொள் ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வாகனங்களை அடித்து நொறுக்கிய 2 ரவுடிகள்

சென்னை,நவ.16-  சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர். நகர்  நகர்புற வாழ்வியல் மேம்பாடு வாரிய குடி யிருப்பு பகுதியில் 3 வாலிபர்கள் மது போதையில் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்க ளால் அடித்து நொறுக்கினர். இதில் ஒரு கார், 16 ஆட்டோ, 10 மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 27 வாகனங்கள் சேதம் அடைந்தன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுங்கையூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு  சென்று விசாரணை நடத்தினர்.  மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வர்கள் யார்? என்பது பற்றி காவல் துறை யினர் விசாரித்தனர். அப்போது குடி போதையில் எல்லை மீறி ரகளையில் ஈடு பட்டது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான விஜய் என்ற ஜாக்கி, லாரன்ஸ் மற்றும் 9 ஆம்  வகுப்பு மாணவன் ஒருவன் என்பது தெரிய வந்தது. விஜய்க்கு 22 வயது, லாரன்சுக்கு 23 வயதாகிறது.  இதையடுத்து 3 பேரையும் காவல்துறை யினர் கைது செய்தனர். விஜய் மீது கொலை  முயற்சி வழக்கு உள்பட 12 வழக்குகளும், லாரன்ஸ் மீது கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவரை ஒருவனை அழைத்துக் கொண்டு அவருக்கு மது வாங்கி கொடுத்து ரகளையில் ஈடுபடச் செய்திருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் பள்ளி மாணவியை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். லாரன்ஸ், விக்கி இருவரும் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய போது தவறி விழுந்தனர். இதில் இருவருக்கும் வலது கை மற்றும் இடது கால் முறிவு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் கூறும்போது, “ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க ஆணையர்  சந்தீப் ராய்  ரத்தோர் கடும் நடவடிக்கை எடுக்க உத்தர விட்டிருப்பதாக தெரிவித்தனர். எனவே எல்லை மீறி செயல்படும் ரவுடிகள் மீது பார பட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

111 ஏரிகள் முழுமையாக நிரம்பியது

செங்கல்பட்டு, நவ.16- தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 1022 ஏரிகளில்  111 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 ஏரிக ளில் 5 ஏரிகள் முழு கொள்ளளவையும், 11 ஏரிகள் 99 விழுக்காடு நிரம்பியுள்ளது. செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 58 ஏரிகள்  முழு கொள்ளளவையும், 121 ஏரிகள் 99 விழுக்காடு, 168 ஏரிகள் 51 முதல் 75 விழுக்காடு,  118 ஏரிகள் 26 முதல் 50 விழுக்காடு, 63 ஏரிகள் 25 விழுக்காடு கீழும் நிரம்பியுள்ளன. அதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத் தில் உள்ள 381  ஏரிகளில் 41 ஏரிகள் முழு கொள்ளளவையும்,  28 ஏரிகள் 76 முதல் 99 விழுக்காடு, 65 ஏரிகள் 51 முதல் 75 விழுக்காடு,  176 ஏரிகள் 26 முதல் 50 விழுக் காடும், 71 ஏரிகள் 25 விழுக்காட்டுக்கு கீழும் நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 93  ஏரிகளில் 7 ஏரிகள் முழு கொள்ளளவையும், 20 ஏரிகள் 76 முதல் 99 விழுக்காடு வரையிலும் .43 ஏரிகள் 51 முதல் 75 விழுக்காடு, 4 ஏரிகள் 26 முதல் 50 விழுக்காடு, 19 ஏரிகள் 25 விழுக் காட்டிற்கு கீழும் நிரம்பியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 ஏரிகளில் 3 ஏரிகள் 51 முதல் 75 விழுக்காடு, 1 ஏரி 25 முதல் 50 விழுக்காடு நிரம்பியுள்ளது என பாலாறு கீழ் வடிநில பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சுடும் பயிற்சி தொடக்கம்

வேலூர், நவ.16- வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி  பள்ளியில் மதுரை, கோவை, விழுப்புரம் உள்பட 17 மாவட் டங்களை சேர்ந்த 2-ம் நிலை பெண் காவலர்கள் 273 பேருக்கு கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் 7 மாத கால அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, யோகா, முதலுதவி அளித்தல், நன்ன டத்தை, கலவரத்தை கட்டுப்படுத்துவது, சட்டம் மற்றும் கணினியை கையாள்வது உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக் கப்பட்டு வருகிறது.  மேலும் காவல் நிலையங்களில் பணியாற்றுவது நீதி மன்றத்தில் கைதியை ஆஜர் படுத்துவது, எஸ்பி அலுவலக பணிகள் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. துப்பாக்கி சுடும் இந்த நிலையில், வேலூர் அடுத்த சலமநத்தம் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில், 2-ம் நிலை பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி புதனன்று தொடங்கியது. இதற்காக காவலர் பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 2-ம் நிலை பெண் காவலர்கள் 72 பேர் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஏகே 47, எஸ்.எல்.ஆர். உள்ளிட்ட துப்பாக்கிகள் சுடும் பயிற்சி மற்றும் அவற்றை கையாளும் முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

23 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை, நவ. 16- சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகை யில் மாநகர காவல்துறையினர் நவ 9 முதல் 15 வரை நடத்திய சோதனையில் பல்வேறு குற்ற வழக்குகளில் 588 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை காவல்துறை அவர்களை சிறையில் அடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு  வாரத்தில், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய கருக்கா வினோத் மற்றும் ககன் போத்ரா உள்ளிட்ட  23 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

நெல்லைக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை, நவ.16- கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர் -நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப் படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர்- மதுரை இடையே இயக்கப் படும் தேஜஸ் ரயில் வியா ழக்கிழமை தோறும் பராம ரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப் படும். எனவே, அந்த வழித்த டத்தில் கூடுதலாக வியாழன் முதல் டிசம்பர் 28-ம் தேதி வரை அனைத்து வியாழக் கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், வழக்கமான கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்ய ப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.இது குறித்து, தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:- சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமை, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) புறப்பட்டு அதே நாள் மதி யம் 2.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்க மாக நெல்லையில் இருந்து வியாழக்கிழமை (நவ.16), 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) புறப்பட்டு அதே நாள் இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

சென்னை மக்களிடம் அதிகரிக்கும் இருமல்

சென்னை, நவ. 16- வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலை யில் சென்னை மக்களி டம் தற்போது இருமல் அதிகரித்து வருகிறது. அதிலும் பெரும்பாலா னோருக்கு இந்த இருமல் ஒரு மாதம் வரை நீடிப்பதாக மருத்துவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்கு பொதுவா னது தான் என்றாலும் இப்போது பரவும் இருமல் தான் அதிக நாட்கள் நீடிக்கி றது. ஆனால் இதற்கான கார ணம் முழுமையாக தெரிய வில்லை. ஆனால் நோயா ளிகளை பரிசோதனை செய்யும் போது வரும் முடிவு களின் பொதுவாக இன்பு ளூயன்சா வைரஸ் பாதிப் புகளாகவே உள்ளன. இது பொதுவாக ஏற்படக்கூடிய வைரஸ் தொற்று தான். ஆனால் ஒவ்வொரு நோயா ளிக்கும் அவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பொருத்து பாதிப்புகள் வேறு படுகிறது. 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு நோயா ளிகளுக்கு இருமல் நீண்ட காலம் நீடிக்கிறது. இதனால் அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இப்போது வைரஸ்களின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது எச்1 என்1 மற்றும் எச்3என்2 வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. இருமல் பாதிப்பு கொண்ட நோயாளிகள் அதிகமாக பேசக்கூடாது. எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். இருமல் நீடித்தால் சுயமாக மருந்து  சாப்பிட கூடாது. மருத்துவ ரின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.