சென்னை, நவ. 4- ரயில்வே மருத்துவ மனைகளில் தரமான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஆர்இயூ வலியுறுத்தியுள்ளது. தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயூ) சென்னை டிவிஷன் 25ஆவது மாநாடு ஓட்டேரியில் எம்.வைரமணி, ஐ.இளங்கோவன் நினை வரங்கில் சனிக்கிழமை (நவ. 4) நடைபெற்றது. தலைவர் எஸ்.சிவாஜி தலைமை தாங்கினார். எம்.பிரபு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சங்கக் கொடியை பொன்னன் ஏற்றி னார். வி.டேனியல் வரவேற் றார். தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோ வன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலா ளர் சு.அருண்குமார் செழியன் செயலாளர் அறிக் கையையும், பொருளாளர் எஸ்.பொன்னன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். “தொழிலாளர் குறை தீர்ப்போம் கிளை வளர்ப் போம்” என்ற தலைப்பில் பென்ஷனர்ஸ் யூனியன் இணை பொதுச் செயலாளர் எம்.ஆர்.சங்கரன் பேசினார். டி.நரேந்திரன் (சிஐடியு), அ.ஜானகிராமன், பேபி ஷகிலா (டிஆர்இயூ), ஏ.முரு கேசன் (டிஆர்பியூ) ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பொதுச்செயலாளர் வி.அரிலால் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தீர்மானங்கள் ரயில்வே, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், அரசு துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. புதிய நிர்வாகிகள் சென்னை டிவிஷன் தலைவராக எஸ்.சிவாஜி, செயலாளராக கே.சீனி வாசன், பொருளாளராக எஸ்.பொன்னன் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப் பட்டனர்.