districts

img

அதிகார திரிசூலத்தை காட்டி பாஜக கூட்டணி அமைத்துள்ளது

திருவள்ளூர், ஏப்.13 - திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திராவிடர் கழகம்  சார்பில் புதனன்று திருவள்ளூர் ரயில்  நிலையம் அருகில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்  தலைவர் கி.வீரமணி பேசு கையில், மோடி தமிழகத் திற்கு இன்னும் எத்தனை முறை வந்தாலும், முகாம் போட்டு தங்கினாலும் இந்தியா கூட்டணி தான் வெற்றிபெறப்போகிறது.  இந்த தேர்தலில் வாக்களித்து  யார் வெற்றி பெற்றார்கள் என்று தெரிந்து கொள்வ தற்கு ஒன்றரை மாதம் காத் திருக்க வேண்டி இருக்கிறது.  அதேபோல நாமும் எப்போது மோடியை வீட்டுக்கு அனுப்ப போகி றோம் என காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. யார் மீது தெல்லாம்  வழக்கு இருக்கிறதோ அவர்கள் மீது திரிசூலம் பாய்கிறது. அதாவது வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை என்ற திரிசூலத்தை காட்டி தான்  தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி அமைத்துள் ளது. நாட்டை காப்பாற்ற நாங்கள் பாடுபடுகிறோம். ஆனால் பாஜக கூட்டணியில்  சேர்ந்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே சென்று இருக்கிறார்கள் என்றார்.   இந்த பொதுக்கூட்டத் திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார்.  நிர்வாகிகள் புவியரசன், ந.ரமேஷ் மோகனவேலு, சற்குணம் மற்றும் திமுக நகர செயலாளர் சி.சு. ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திக  மாவட்ட செயலாளர் கிருஷ் ணமூர்த்தி வரவேற்றார். இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன், எம்எல்ஏ,  திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் பாண்டி யன், மாவட்ட அவைத் தலை வர் கே.திராவிட பக்தன், விசிக நீலவானத்து நிலவன்,  சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், சிபிஐ  மாவட்ட செயலாளர் கஜேந் திரன் ஆகியோர் பேசினர். நிறைவாக நிர்வாகி இரா.  ஸ்டாலின் நன்றி தெரிவித் தார்.

ஜனநாயக மரபை தூக்கி எறிந்தவர் மோடி 

 மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும் போதும் திமுகவை ஒழிப்பேன் என பேசி வருகிறார். மோடி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த பதவியை நிரப்பாமலேயே இருந்தவர் மோடி எனவும் ஜனநாயக மரபை தூக்கி எறிந்தவர் எனவும் குற்றச்சாட்டினார்.