districts

img

மின்கம்பத்தின் நடுவில் வடிகால்வாய்

கடலூர்,செப்.19- கடலூர் சரவணா நகர், நத்த வெளி சாலையில் மின் கம்பங்களை நடுவில் வைத்து வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் கடந்த ஆண்டு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியின் போது பழைய ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இரும்பு  கதவு, வேலை வாய்ப்பு அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவு திறக்க முடியாதவாறு கான்கிரீட் கொட்டி வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. மேலும் கடலூர் கோண்டூர் பகுதி யில் குடிநீர் குழாயை அகற்றாமல் கழிவுநீர் கால்வாய் அமைத்தனர். அதேபோல் வேலூர் மாநகராட்சியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், ஜீப் மற்றும் தெருவில் இருந்த குடிநீர் அடி பம்பு டன் சாலை அமைக்கப்பட்ட சம்ப வங்கள் தொடர்ந்து வருகிறது. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தாரர்களின் அலட்சியத்தால் இது போன்ற சம்பவங்கள் கடந்த ஓராண்டாக பல மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் கடலூரில் மின்கம்பங்  களை அகற்றாமல் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்ட சம்பவம்  மீண்டும் அரங்கேறி உள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி ரோடு-சரவணா நகர் இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் இல்லாத தால், மழைக்காலங்களில் குடி யிருப்புகளை சுற்றிலும்  பல நாட்கள் தண்ணீர் தேங்கி சுகா தார சீர்கேட்டை ஏற்படுத்தும் மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் இறைத்து அப்புறப் படுத்தும் நடவடிக்கையும் தொடர்ந்து வந்தது. இதனால் அப்பகுதியில் வடி கால் வாய்க்கால் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கான மாநக ராட்சி சார்பில் ரூ.2 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதையடுத்து வடிகால் வாய்க்கால் கட்டும் பணிக்கு கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, வாய்க்கால் கட்டும் பணியை தொடங்கி நடைபெற்றது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், தற்போது வாய்க்கால் மேல் பகுதியில் சிமெண்ட் சிலாப் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் அடுத்தடுத்துள்ள 3 மின்கம்பங்களை அகற்றாமல், அவை வாய்க்காலின் நடுவில் இருக்கும்படி வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது.  மழைக்காலங்களில் தண்ணீரில் அடித்து விடப்படும் குப்பைகள் மின் கம்பங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டால் முழுவதும் தண்ணீர் வருவது  தடைப்படும். வடிகால் வாய்க்கால்  கட்டிய தற்கான பயனே இல்லாமல் போய் விடும் சூழல் உள்ளது.  பல்வேறு துறைகளுக்கு ஒருங்கிணைப்பு இல்லாததால், அவரவர் இஷ்டத்துக்கு அரசு ஒப்பந்த பணிகள் நடைபெறுவதால் இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வடிகால் வாய்க்கால் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்றி அமைத்துவிட்டு, வடிகால் வாய்க்கால் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநக ராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.