districts

வரதட்சணை கொடுமை கழுத்தை அறுத்த கணவன்

சிதம்பரம், ஜூலை 4-

   சிதம்பரம் அருகே கீழ அனுபம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசனுக்கும் சீர்காழி அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜாவுக்கும் மே 4 ஆம் தேதி திரு மணம் நடைபெற்றது. வரதட்சணை குறைவாகக் கொடுத்து விட்டதாக சிலம்பரசனும் அவரது தாய் சுந்தரியும் ரோஜாவிடம் அவ்வப்போது சண்டை போட்டுள்ளனர். சம்பவத்தன்று, குடிபோதையில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கையில் வைத்திருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை துடிக்கத் துடிக்க அறுத்துப் படுகொலை செய்துள்ளார்.  

   பின்னர், கிள்ளை காவல் நிலையத்தில் சரண டைந்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரோஜாவின் உடலைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி இரு மாதங்களே ஆனதால் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

   இந்த சம்பவத்தை அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா, துணைச் செய லாளர் சித்ரா, சிதம்பரம் நகர தலைவர் அமுதா, பரங்கிப் பேட்டை ஒன்றிய தலைவர் அம்சா, செயலாளர் விமலா உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று ரோஜாவின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகா, “ இந்தச் சம்பவத்தை கணவர் மட்டும் தனியாகச் செய்ய வில்லை. அவரது தாயாரும் கழுத்தை அறுக்க துணை யாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

   சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சி நாதன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.