வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூர் 37ஆவது வட்டம் உதயசூரியன் தெருவில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், திமுக பகுதிச் செயலாளர் அ.முருகன், சிபிஎம் நிர்வாகிகள் ஆர்.ஜீவா முனுசாமி, டி.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.