districts

img

நூலகத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நன்கொடை

மணலூர் பேட்டை,ஆக.12-

    மணலூர்பேட்டை கிளை நூலகத்தில், நூலகர் தின விழா சனிக்கிழமை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவி யாளர் ம.ஆனந்தன், ஆசிரியர் கோ.ரம்யா ஆகியோர் நூலக வாசகர்கள் பயன்பாட்டிற்கு ரூ. 12,500 மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரத்தை நல் நூலகர் மு.அன்பழகனிடம் வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் வாசகர் வட்ட பொரு ளாளர் வீர.சந்திரமோகன், உடற்கல்வி இயக்குநர் எம்.பாலாஜி, பதிவுத்துறை தே.அய்யனார், ஆசிரியர்கள் ச.இளங் கோவன், ம.வினோத்குமார் பள்ளிக்கல்வித் துறை சஞ்சீவி ராமன், சமூக ஆர்வலர்கள் செல்வகணபதி ந.சரவணன், ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.