districts

img

துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்ட இடத்தில் கடலோர காவற்படை கப்பல்கள் நிறுத்தம்

சென்னை, மார்ச் 15- இந்திய கடலோர காவல்படை  சென்னை துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்ட ஸ்லிப்-வேயில் கப்பல்களை நிறுத்தும் பணியை தொடங்கியது. கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தின் தலைமை தளபதியும் தலைமை இயக்குநருமான டோனி மைக்கேல், கடலோர காவல்படையின் மற்ற மூத்த அதிகாரிகளுடன் இந்த புதுப்பிக்கப்பட்ட  ஸ்லிப்-வேயை  திறந்து வைத்தார். இந்திய கடலோர காவல்படை சென்னை துறைமுகத்திடமிருந்து 61000 சதுர மீட்டர் கடல்பரப்பு மற்றும்  48000 சதுர மீட்டர் நிலப்பரப்பு கொண்ட, 27 ஏக்கர் நிலப்பரப்பை குத்தகைக்கு எடுத்துள்ளது. ஸ்லிப்-வே, கடலோரக் காவல் படையின் பழுதுபார்க்கும் வசதி களுக்கு ஊக்கமளிக்கும். இது  பழுது பார்ப்பு பணியில் இருக்கும்  கப்பல்களை விரைவாக கொண்டு  சென்று மீண்டும் கப்பல்நிறுத்து மிடத்திற்கு கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.  ஸ்லிப்-வே திறப்பு விழா என்பது கடலோரக் காவல்படையின் நீண்ட  கால முயற்சியின் ஒரு பகுதியாகும்.  அதன் கப்பல்களைப் பழுதுபார்ப்ப தற்காக  கட்டமைப்பை உருவாக்கி இருப்பதால் மற்ற நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. இதன் மூலம், எளிய முறையில் கிழக்குப் பிராந்தியத்தில், ரோந்துக் காக கடலோர காவல்படை கப்பல்களை இயக்க முடியும் என்று அப்படையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.