சென்னை, ஜூலை 29- நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தி யாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டை தாரர்களுக்கு மீண்டும் விநி யோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள உத்தர வில், 'நியாய விலைக்கடை களுக்கு அனுப்பப்படும் அரிசி யின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரிபார்த்து தரமானஅரிசியை மட்டுமே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். நியாய விலைக்கடைகள் உட்புற மும் வெளிப்புறமும் தூய்மை யாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடும்ப அட்டைதாரர்க ளுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசியப் பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட் கள், குடும்ப அட்டைதாரர்க ளுக்கு மீண்டும் விநி யோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும்.அரிசி யின் தரத்தினை கிடங்கு களில் சரிபார்த்து, தரமான அரிசியை மட்டுமே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படுவதை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்’ என அனைத்து மண்டல இணை பதி வாளர்களுக்கு சுற்றறிக்கை மூலம் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.