districts

img

செங்கல்பட்டில் திமுக உண்ணாநிலை போராட்டம்

செங்கல்பட்டு, ஆக.20-

      சென்னை பல்லாவரத் தில், நீட் தேர்வு காரணமாக மாணவர் ஜெகதீசன் மற்றும் அவருடைய தந்தை செல்வம் ஆகிய இருவர் தற்கொலை செய்து கொண்டனர். இதுவரை நீட் தேர்வால், தமிழ்நாட்டில் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

     உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாநிலை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை அருகே, திமுக இளைஞரணி சார் பில் உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்.  காஞ்சிபுரம் தொகுதி மக்கள் உறுப்பினர் க.செல்வம் , சட்ட மன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ் பாலாஜி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர் மற்றும் விசிக , சிபிஐ நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.