districts

img

வேலூர் கணியம்பாடி பகுதிகளில் து.மு.கதிர் ஆனந்த் வாக்குசேகரிப்பு

வேலூர், மார்ச் 30 - வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்த்,  வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  விருபாட்சிபுரம், அரியூர், சித்தேரி  கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குட் ்பட்ட பென்னாத்தூர், சோழவரம், கீழ் அரசம்பட்டு, நாகநதி உள்ளிட்ட இடங்களில்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது அணைக் கட்டு சட்டமன்ற உறுப்பினரும் திமுக  மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி மேயர் சுஜாதா,பகுதி செயலாளர்கள் அய்யப்பன், தங்கதுரை சிபிஐ மாவட்ட செயலாளர் ஜி.லதா, காவேரி மற்றும் பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்கள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட  கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். சித்தேரி பகுதியில் வாக்கு சேகரிப்பின்  போது சிபிஎம் சார்பில் வரவேற்பளிக்கப் பட்டது. இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம், வேலூர்  தெற்கு செயலாளர் எஸ்.செல்வி, கிளைசெய லாளர்கள் சாந்தி, புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.