districts

img

சிபிஎம் போராட்ட எதிரொலி பட்டா வழங்க வட்டாட்சியர் ஒப்புதல்

கள்ளக்குறிச்சி,மார்ச் .6 - பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் குடும்பத்தோடு குடியேறும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் பட்டா வழங்க புதனன்று ஒப்புதல் அளித்துள்ளார். உளுந்தூர்பேட்டை வட்டம், கூத்தனூர், பல்லவாடி, வடுகம்பாளையம், ஏ.அத்திப்பாக்கம், கொம்ப சமுத்திரம் கிராமங்களில் குடியிருக்கும் மக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக பட்டா வழங்கா மல் வருவாய் துறை அதிகாரிகள்  அலைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சி சார்பில் பட்டா கோரி குடி யேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனு அளித்த அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை, மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர்  டி. எம்.ஜெய்சங்கர், மாவட்ட குழு டீ.ஏழு மலை, ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன், ஒன்றிய குழு ஜெயமூர்த்தி, பச்சையப்பன், செல்வராஜ், மலர், அஞ்சலை, கோவிந்தன் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர். வட்டாட்சியர் அறிவிப்புக்கு பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.