உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றிஆர்ப்பாட்டத்தில் மாற்றுதிறனாளிகள் சங்கத்தினர் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் ப.முருகன் தலைமை தாங்கினார். மாநிலதுணைத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜி.ஜெயக்குமார், துணை செயலாளர்எம்.முத்துவேல்,திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அமைப்பாளர் வி.கோவிந்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.