districts

வீடு வீடாக தடுப்பூசி போட சென்னையில் ‘சிலிப்’ விநியோகம்

சென்னை, மே 4-  தமிழகம் முழுவதும் வரும் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் முகாம்  களை நடத்தாமல் காலை யில் இருந்து மதியம் வரை ஒரு பகுதியிலும், பிற்பகல் முதல் மாலை வரை மற்றொரு பகுதியிலும் முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக இது வரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் இருக்கும் பகுதியில் முகாம்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகின்றன. சென் னையில் தடுப்பூசி போடக் கூடிய தகுதி உள்ளவர்களாக 55 லட்சம் பேர் உள்ளனர்.  சென்னையை பொறுத்த வரை 2-வது தவணை தடுப்பூசி போடாமல் 9 லட்சம்  பேர் உள்ளனர். முதல் தவணை 75 ஆயிரம் பேர் போடாமல் உள்ளனர். 2-வது தவணை போடக் கூடிய அவகாசம் முடிந்த நிலையில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு மண்டலம்  வாரியாக கணக்கெடுக் கப்பட்டு தடுப்பூசி போடா மல் இருந்து வரும் மக்க ளுக்கு வீடு வீடாக சிலிப்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர். ஒவ்வொரு வார்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அவர்களின் பெயர் மற்றும் தடுப்பூசி போடக்கூடிய மையம் போன்றவற்றை குறிப்பிட்டு வருகிற 8ஆம் தேதி சிறப்பு முகாமில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டு வருகிறது. முகாம் நடைபெறுவதற்கு இன்னும் 3 நாட்கள் இருப்பதால் அதற்குள்ளாக ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.