கடலூர், மார்ச் 20- நாடாளுமன்றத் தேர் தலில் மூத்த குடிமக்கள் தபால் வாக்களிப்பதற்கான விருப்ப மனு பெறப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வா கம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கும், 40 விழுக்காட்டிற்கு மேல் ஊன முற்ற மாற்றுத்திறனாளிக ளுக்கும் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. அதன்படி புதனன்று கடலூர் வட்டாட்சியர் பலரா மன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன், வாக்குச்சாவடி அலுவலர் முகமது சாதிக் மற்றும் ஊழியர்கள் மஞ்சக்குப்பம் பகுதியில் மாற்றுத்திறனாளி கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று 12-டி படிவத்தை விநியோகம் செய்துனர். மேலும் அதில் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க விருப்பம் உள்ளதா? அல்லது தபால் வாக்கு அளிக்க உள்ளீர் களா? என கேட்டறிந்து அதை விண்ணப்பத்தில் பதிவு செய்து சென்றனர். கடலூர் சட்டமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1700 பேரும், 40 விழுக் காட்டிற்கு மேல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 1253 பேரும் என மொத்தம் 2953 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.