districts

img

அதி நவீன தண்ணீர் உறிஞ்சும் இயந்திரம்

கள்ளக்குறிச்சி டிச.6- கள்ளக்குறிச்சி மாவட்டம், சென்னை யில் புயல் பாதிப்பால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதையடுத்து பொது மக்கள் நலன் கருதி விரைந்து அகற்று வதற்கு போதிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் சார்பில் அதி நவீன வசதியுடன் ஜெனரேட்டருடன் கூடிய நீர் உறிஞ்சும் வாகனத்தை கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் அலமேலு ஆறுமுகம், மாவட்ட திட்ட இயக்குநர் செல்வ ராணி, செயற்பொறியாளர் மலர்விழி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரத்னமாலா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 27 சிறப்பு மருத்துவக் குழுக்கள், 10 தீயணைப்பு வீரர்கள், மோட்டார் படகு, 5 மரம் அறுக்கும் கருவி, 10 பாதுகாப்பு உடை, அதிநவீன பம்பு, மின்சாரத் துறை சார்பில் 6 பேர் கொண்ட மின்சார வாரியம் பணியாளர்கள் குழு, புயல் மீட்பு பணிகள் மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.  தளவாட பொருட்களின் 2 டெம்போ, தூய்மை பணியாளர்கள் 30 பேர் அனுப்பி வைத்தனர்.