districts

மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு?

சென்னை, மார்ச் 10 - மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றியவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் ஒப்புக் கொண்டனர். கிண்டி பகுதியை சேர்ந்தவர் சாய்லஷ்மி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 80 விழுக்காடு மாற்றுத்தினாளியான இவரை, ஆதம்பாக்கத்தை சேர்ந்த மோகன சுந்தரம் என்பவர் காதலித்து வந்தார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில்,  சாய்லட்சுமி கர்ப்பமுற்றார். இதனையறிந்த மோகனசுந்தரம், சாய்லஷ்மியை சந்திக்க மறுத்து வந்தார். திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துள்ளார். இதனால் தோமையார் மலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜனவரி மாதம் 28ந் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதியவில்லை. இதனால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர்  புதனன்று (மார்ச் 9) இரவு காவல் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதனையடுத்து மாதர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ். சரவணசெல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் n ஜ.ஜூலியட், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.சாந்தி ஆகியோரிடம், காவல்துறை உதவி ஆணையர் நாசர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் பாதிக்கப்பட்ட சாய்லஷ்மியிடம் விசாரணை நடத்திய உதவி ஆணையர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து போராட்டம் நள்ளிரவு போராட்டம் முடிவுக்கு வந்தது.