districts

img

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திருவண்ணாமலை டிச.22- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களை அந்தியோ ஜனா, அன்ன யோஜனா  திட்டத்தில் இணைக்க வேண்டும், மூன்று மாதத் திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைவு கூட்டத்தை நடத்த வேண்டும்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள்  அலுவலகம் வரை பேட்டரி வாகனம் இயக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அலட்சியப் போக்குடன்  நடத்துகிற மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக ஊழியர் எலிசபெத்தை பணி யிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி. ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கே. ஆர். சக்கரவர்த்தி, மாவட்டச்  செயலாளர் ஆர். சிவாஜி, பொருளாளர் பி. சத்யா, மாவட்ட துணைச் செயலா ளர் எம். எஸ். சங்கர், மாவட்ட  துணைத் தலைவர் சார வல்லி, நிர்வாகிகள் பாக்கியராஜ், சந்திரசேகர், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.