சென்னை, ஏப். 18 - மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விவகாரத் தில் சமூக நலத்துறை செயலாளர் அந்த பதவியில் நீடிக்கவே தகுதியில்லை. அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பார்வை மாற்றுத் திறனா ளிகளுக்கு நியாயமான உதவித் தொகையை வழங் கக் கோரி 2018ல் தொடர்ந்த வழக்கு திங்களன்று (ஏப்.18) தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கர வர்த்தி அமர்வில் விசார ணைக்கு வந்தது. அப்போது, உதவித் தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக் கப்பட்டது. உதவித் தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலா ளர் அக்கறையுடன் செயல் படவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டனர். தற்போதைய விலை வாசியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ரூபாய், 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு பதில், அவற்றை நிறுத்தி விடலாம். அந்த தொகை எப்படி போது மானதாக இருக்கும். இந்த சொற்ப தொகையை கொடுத்து பார்வை மாற்றுத் திறனாளிகளை அவமானப் படுத்தக் கூடாது என அதிருப்தி தெரிவித்தனர். தமிழக சமூக நலத்துறை செயலாளர், அப்பதவியில் நீடிக்க தகுதியில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக் கின் விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.