உலக புத்தக தினமான செவ்வாயன்று (ஏப்.24) இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் எழுதிய ‘இரும்புப் பாதைகள்’ நூல் அறிமுக நிகழ்வை நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க ஐசிஎப் கிளையும், ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியனும் (சிஐடியு) இணைந்து நடத்திய இந்த நிகழ்வுக்கு தமுஎகச கிளை பொருளாளர் வி.மோகன் தலைமை தாங்கினார். நூலை அறிமுகம் செய்து தமுஎகச கிளை தலைவர் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன் பேசினார். தணல் பதிப்பகம் அ.சாதிக் பாட்ஷா, ஐசிஎப் யூனியன் பொதுச்செயலாளர் பா. ராஜாராமன், எழுத்தாளர் நா.அருண், கவிஞர் எஸ்.வி.வேணுகோபாலன், தமுஎகச மத்திய சென்னை மாவட்டத் தலைவர் அருண்கண்ணன், கிளைச் செயலாளர் என்.ஸ்ரீதர், கோவி. அரங்கநான் உள்ளிட்டோர் பேசினர்.