சென்னை, நவ,18- உலக நீரிழிவு நோய் தினத்தை யொட்டி, சென்னையில் உள்ள க்ளெனீகிள்ஸ் ஹெல்த்சிட்டி சென்னை, ஜாராகிளினிக், கீழ்ப்பாக்கம் மற்றும் எலிம் கிளினிக் சித்தாலப்பாக்கம் ஆகியவற்றுடன் இணைந்து காவலர்களுக்கு நீரிழிவு நோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமை நடத்தியது. இதனை தாம்பரம் நகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் துவக்கிவைத்தார். 150க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். பரபரப்பான வேலைக்கு மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கான பல்வேறு உணவுத் திட்டங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் தொடர்பான ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர். போலீசாருக்கு அடிப்படை சர்க்கரைநோய் பரிசோதனை, ரத்தஅழுத்தம், கொலஸ்ட்ரால், கிரியேட்டினின் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.