கிருஷ்ணகிரி,செப்.12- ஓசூர் மாநகராட்சி எல்லைக்குள் தேன்கனிக் கோட்டை சாலையில் தின்னூர் பின்பகுதியில் வாசவி நகர் உள்ளது.இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் 20க்கும் மேற்பட்ட வீதிகள் 1200க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு வாசவி நகராக உருவாக்கப்பட்ட இங்கு அரசு ஊழி யர்கள், பெருந் தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், அதிகாரிகள் என நடுத்தர மக்களே அதிகம் உள்ளனர். வாசவி நகர் குடியிருப்போர் நல சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்கள், வலியுறுத்தல் காரணமாக இந்நகரின் பெரும்பாலான வீதிகளுக்கு தார், சிமெண்ட் சாலை அமைத்து தரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக பிரதான சாலை நகர் முன்பிருந்து கடைசி வரை இன்னும் குண்டும் குழியுமாக மழைக் காலத்தில் சேரும் சகதியுமாக உள்ளது. இது குறித்து தீக்கதிர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளி யிடப்பட்டது. இதையடுத்து, மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமையில் பொறி யாளர்,மேலாளர், சிபிஎம் மாநகர செய லாளர் சி.பி. ஜெயராமன், நகர நிர்வாகி ஆனந்தகுமார், கவுன்சிலர் ஆகியோர் முன்னிலையில் வாசவி நகர் பிரதான சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது.