தொழிலாளர், விவசாய விரோத ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. வடசென்னை மாவட்டத் தலைவர் விஜயகுமரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, தென் சென்னை மாவட்டச் செயலாளர் முத்துக்குமாரசாமி வேல், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க சென்னை மாவட்ட தலைவர் ராமு, அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஹேமலதா, மாவட்ட இணைச் செயலாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.