districts

img

தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் தர்ணா

திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கிகளையும்,  விவசாயிகளையும் ஏமாற்றியுள்ள ஆலை முதலாளிகள் மீது நட வடிக்கை எடுக்ககோரியும் விவசாயிகளை ஏமாற்றிய போளூர் எஸ்பிஐ வங்கி கிளையை கண்டித்தும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் தர்ணா நடைபெற்றது.  இந்த போராட்டத்தில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி கே. பாலமுருகன் தலைமை தாங்கினார்,  மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன்,  பொரு ளாளர் எஸ். வேல்மாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் டி.கே. வெங்கடேசன்,  எஸ். பலராமன், உதயகுமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி ப.செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.