புதுச்சேரி, அக். 30- வீடற்ற மக்களுக்கு குடிமனைப் பட்ட வழங்கக் கோரி பாகூரில் கொட்டும் மழையில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி மாநிலம், பாகூர் கிராமப் பகுதியில் சாலையோரம், கோவில் இடம், அரசு புறம்போக்கு இடங்களில் குடியிருக் கும் ஏழை எளிய வீடற்ற மக்க ளுக்கும்,வாடகை வீட்டில் குடியிருப்பவர் களுக்கும் குடிமனைப் பட்ட வழங்க வேண்டும். தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு கரையாம் பத்தூர், மணப்பட்டு, அரங்கனூர் ஆகிய இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பிரித்து குடிமனைப் பட்டா உடனே வழங்க வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. பாகூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பிரபு ராஜ்,மாநில குழு உறுப்பினர் கலியன், வடிவேலு, சேகர், அரிதாஸ், மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் பேசினர்.