கள்ளக்குறிச்சி, அக் 3- கல்வராயன் மலைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்தார். கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குண்டியாநத்தம் ஊராட்சி, நொச்சிமேடு கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராணி, மகளிர் திட்டம் (திட்ட இயக்குநர்) சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.