பாழாகிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் கடைகள்
சென்னை,செப்.4- மெரீனா கடற்கரையை அழகுபடுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி ரூ.16.5 கோடி செலவில் 900 ஸ்மார்ட் கடை களை தயார் செய்ய ஆர்டர் கொடுத்து கொள்முதல் செய்தது. ஆனால் இவை களை பயன்படுத்தாமல் மயிலாப்பூர் ஆர்.கே.சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் குவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18மாதங்களாக 50க்கும் மேற்பட்ட கடைகள் கவனிப்பாரற்று கிடக்கிறது. ஸ்மார்ட் பராமரிக்கப்படாததால் இவற்றின் கதவு கள் உடைந்தும் முற்றிலும் சிதலமடைந்து பயன்படுத்த முடியாதபடி உள்ளன. இந்த ஸ்மார்ட் கடைகள் சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டதால் வியாபாரிகள் இதனை பயன்படுத்துவதில் மாற்றுக்கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்த விவகாரம் மாந கராட்சி மன்ற கூட்டத்திலும் எதிரொலித்தது. இந்த கடைகள் ஏற்கனவே இருக்கும் வியா பாரிகள் 540 பேருக்கும் எஞ்சியவை வெளி நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறியதாகவும் ஆனால் கடல் மணலில் இந்த வண்டி வடிவிலான கடைகள் நகர்த்து வதற்கு சிரமமாக இருந்ததால் வியாபாரி களும் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள் மெரீனா கடற்கரை வியாபாரிகள். இந்நிலையில் வீணாகி கொண்டிருக்கும் இந்த கடைகளை என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அரசு அதிகாரிகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தீப்பிடித்து புல்லட்கள் நாசம்
திருபெரும்புதூர்,செப்4- திருபெரும்புதூர் அடுத்த வடகால் பகுதியில் பிரபல நிறுவனத்தில் புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் ஞாயி றன்று நள்ளிரவு தொழிற் சாலையில் இருந்து 88 புல்லட் மோட்டார் சைக்கிள் கள் கண்டெய்னர் லாரி யில் ஜார்க்கண்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்டெய்னர் லாரி வண்ட லூர்-வாலாஜாபாத் சாலை யில் காரணை தாங்கல் என்னும் இடத்தில் சென்ற போது திடீரென லாரி யில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் கண்டெய்னர் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்த னர். எனினும் இந்த தீவி பத்தில் 20-க்கும் மேற்பட்ட புதிய புல்லட் மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.
சிறுதாவூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை பாதுகாத்திடுக
மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு
செங்கல்பட்டு, செப். 4- சிறுதாவூர் கிராமத்தில் தலித் மற்றும் பழங்குடியினர் மக்கள் விவசாயம் செய்திட வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கும் வகையில் பாது காக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருப் போரூர் வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் தலித் மக்கள் 20 குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய தலா ஒரு நபருக்கு 2.5 ஏக்கர் வீதமும் வீட்டுமனையாக தலா 10 சென்ட் இடமும் 1967-ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் மொத்தம் 53 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது இந்த நிலங்களை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதன் விளைவாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2006 ஆம் ஆண்டு நீதியரசர் கே.வி.சிவசுப்பிரமணியத்தை தலைவராக கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டார். விசாரணை ஆணையம் 20..2.2010 ல் தனது விசா ரணையில் முடிவாக மேற்படி கிராமத்தில் உள்ள புல எண்கள் 365, 366, 370, 373, 374, 375, 376, 377, 378, 388, 389, 390, ஆகியவற்றில் உள் 53 ஏக்கர் நிலம் மற்றும் அரசு புறம்போக்கு நிலம் 34 ஏக்கர் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு கைபற்றி அதைனை நிலமற்ற ஏழை தலித் மற்றும பழங்குடி மக்க ளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற பரிந்துரைத்தது. மேலும் சட்டமன்றத்தில் அன்றைய தலைமை செயலாளர் கே.எஸ்.திரிபாதி கீழ்கண்டவாறு ஆணையர் நிலம் மற்றும் மாவட்ட ஆட்சி யர் குறிப்பிட்டுள்ள நிலங்களை நிலமற்ற, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் வழக்காக நிலுவை யில் உள்ளது. நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த நிலங்களை தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்து ரியல் எஸ்டேட் செய்யும் நோக்கத்துடன் நிலங்களை கைப்பற்றப்பட்டு வருகிறது. இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சி யர் உடனடியாக தலையிட்டு ஆக்கிர மிப்புகளை அகற்றியும் 53 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து முள்வேலி அமைத்து அறிவிப்பு பலகை வைத்து பாதுகாத்திட வேண்டும் இவ்வாறு அம்மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு
சென்னை, செப். 4- சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பருவமழையின் போது பெய்த மழையினால் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 250 கோடி மதிப்பில் 71 கி.மீ. நீளத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புளியந்தோப்பு, கொளத்தூர், அசோக் நகர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் 49 கி.மீ. நீளமுள்ள வடிகால் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தற்போது 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 15ஆம் தேதிவரை வரையிலான காலக்கெடு தற்போது செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள பணிகளை நீட்டிக்கப்பட்ட அவகாசத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. முன்னுரிமை பணிகளை சிறப்புக் குழு கண்கானிக்கும், தாமதமாக பணிகளை மேற்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.
ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் தொடங்க அழைப்பு
சென்னை,செப்.4- சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவ தாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. புதிய சில்லறை விற்பனை நிலைய பாலகம் அமைப்ப தற்கு அதன் பரப்பளவு மற்றும் வடிவமைப்புக்கு ஏற்றார் போல் சுமார் 1.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை முதலீடு தேவை. மேலும் ஆவின் நிறுவனத்திற்கு ரூ.30,000 மட்டுமே வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். மக்கள் நடமாட்டமும் மற்றும் பாலகம் அமைக்கும் இடத்தை பொறுத்து மாதந்தோறும் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்பனையை எதிர்பார்க்கலாம். பாலகத்திற்கு தேவைப்படும் பொருட்கள் 48 மணி நேரத்திற்கு முன்பே ஆவின் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் பதிவு செய்யப்பட்ட பொருட்கள் ஆவின் நிறுவன வாகனம் அல்லது மொத்த விற்பனையாளர் மூலம் விநியோகம் செய்யப்படும். ஆவின் நிறுவன பால் உபபொருட்களுக்கு குறைந்தபட்சம் 8% முதல் 18% வரை கமிஷன் வழங்கப்படும். இப்பாலகத்தில் ஆவின் பால் உபபொருட்களை கொண்டு மில்க்ஷேக், லஸ்ஸி, சுடுபால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யப்படலாம். எனவே ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம் (Aavin Frachisee Parlour) தொடங்க விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறவும். பொது மேலாளர்(விற்பனை), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், கூட்டாண்மை அலுவலகம், விற்பனை பிரிவு, நந்தனம், சென்னை-35 தொலைபேசி எண் – 9043099905, 9790773955, 9566860286 இவ்வாறு ஆவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குடிநீரில் கழிவுநீர்: ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
விழுப்புரம்,செப்.4- விழுப்புரம் மாவட்டம், நவமால்மருதூர் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நவமால்மருதூர் ஆதிதிரா விடர் பகுதியில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு கழிவு நீர் கலந்த நிலையில் அதனை பயன்படுத்தி பலர் பாதிக்கப்பட்டனர், அதனை உரிய நேரத்தில் பார்வையிட்டு பிரச்ச னையை சரிசெய்ய தவறிய காரணத்திற்காக, மாவட்ட ஆட்சியர் பழனி அறிவு ரைப்படி நவமால்மருதூர் ஊராட்சி செயலர் வாசுதே வன் என்பவரை பணி யிடை நீக்கம் செய்து கண்ட மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உத்தரவிட்டார், அதனைத் தொடர்ந்து ஊராட்சி செய லர் வாசுதேவன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 8 பேர் கைது
கிருஷ்ணகிரி,செப்.4- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை ஓசூர் சிப்காட், சூளகிரி, காந்திகுப்பம் ஆகிய பகுதி யில் வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.700 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்த கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.540 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல தடை செய்யப்ட்ட குட்கா விற்பனை செய்த வேப்பனப்பள்ளி, பர்கூரை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். பணம் வைத்து சூதாடியதாக ஓசூர், சூளகிரி, பர்கூர், நாகரசம்பட்டியை சேர்ந்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை- கொடுத்தவர் கைது
சென்னை,செப்.4- சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிக்கு தேனாம்பேட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஒரு வருடமாக மாணவியிடம் தகாத முறையில் நடந்து உள்ளார். இதுபற்றி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். பாலியல் சீண்டல் குறித்த விவரங்களை சிறுமி கூறியவுடன் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் கணேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.