சென்னை, ஜன.5- சென்னை அண்ணா நகரில் முக்கிய 5 சந்திப்புகளில் நிறுவப் பட்டுள்ள போக்குவரத்து விதி மீறல்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்கும் டிரோஸ் ஒரு வெற்றிகரமான திட்டம் என்று காவல்துறை கருதுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 7,000 சலான்களை இது தானாக உரு வாக்குகிறது. மேலும் ஸ்பென்சர், ஈகா சந்திப்பு மற்றும் மின்ட் சந்திப்பு ஆகிய 3 இடங்களில் டிரோஸ் சிக்னல்களை புதிதாக நிறுவ ரூ.10.5 கோடி நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். போக்குவரத்து விதிமீறல்களைப் பதிவு செய்ய 11 சந்திப்புகளில் 15 கேமராக்கள் நிறு வப்பட்டு ஐ.டி.ஆர்.எஸ் அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அனுமதியில்லாத வழி யில் செல்பவர்கள் மற்றும் ஹெல்மெட் அணியாமல் வாகன ஓட்டுபவர்களையும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்பவர்களையும், இருசக்கர வாகனத்தில் மூவர் செல்பவர்களையும் கண்டறிந்து தானாகவே இ-சலான் உருவாக்குகிறது. வாகன ஓட்டிகள் தங்கள் வாக னங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள இ-சலான் பற்றிய தகவல் களைப் பெற 12 அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு மையங்கள் மூலம் மொத்தம் ரூ.29கோடி அப ராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக போக்கு வரத்து சிக்னல் தெரிவதற்காக 25 புதிய எல்.இ.டி. கம்பங்கள் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ளன. பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள 68 சிக்னல்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு அதிக காவ லர்கள் இருப்பதை உறுதி செய்வதற் காக 186 முக்கிய சந்திப்புகளில் ரிமோட் சிக்னல்கள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய 104 சந்திப்புகளில் ஒலிபெருக்கி மற்றும் பாடல்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.