districts

அரசு பள்ளிக்கு மேசை, நாற்காலி

கிருஷ்ணகிரி,ஜூலை 26-

    கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 305 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் போதிய மேசை, நாற்காலி வசதியின்றி மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வந்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, அசோக் குமார் எம்.எல்.ஏ.விடம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்தில் மேசை, நாற்காலிகள் வழங்கினார்.