districts

img

மலக்குழி, விஷவாயு மரணங்களை தடுக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறை

மலக்குழி, விஷவாயு மரணங்களை தடுக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை உருவாக்க கோரி திங்களன்று (மார்ச் 27) சைதாப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலி, முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆதிதமிழர் கட்சித் தலைவர் கே.ஜக்கையன் உள்ளிட்டோர் பேசினர்.