திருவள்ளூர், ஏப் 18- செல்லம்மா பாரதியின் நினைவைப் போற்றும் வகையில் திருநின்றவூர் சேவாலயா வளாகத்திலிருந்து கடையம் நோக்கி செல்லம்மா பாரதி ரத யாத்திரை புறப்பட்டது. திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் சேவாலயா அறக்கட்டளை சார்பில் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பாரதி 1897 ஜூன் 27 அன்று அம்பாச முத்திரம் அருகே கடையம் கிராமத்தில் செல்லம்மாளை மணந்தார். பின்னர், 1919 இல் கடலூர் சிறையில் இருந்து பாரதியார் விடுதலை செய்யப்பட்டபோது, 2 ஆண்டு கள் கடையத்தில் வாழ்ந்தார். அதனால், அங்கு அவரின் நினைவை நிலைக்கச் செய்யும் திட்டத்தை சேவாலயா தொடங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக வரும் ஜூன் 27 ஆம் தேதி அன்று, கடையத்தில் பாரதியாரின் 125-வது திருமண நாளையொட்டி, செல்லம்மா மற்றும் பாரதியின் உருவச் சிலையை சேவாலயா நிறுவவுள்ளது. அந்த காலத்திலேயே செல்லம்மாவின் தோளில் கை வைத்து நின்றபடி பாரதியார் ஒரு புகைப்படத்திற்கு போஸ்கொடுத்திருப்பார். அந்த நிகழ்வு 7 அடி உயர சிலையாக செதுக் கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக கடையம் கொண்டு சென்று நிறுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிலை சேவாலயா வளாகத்திலிருந்து சென்னை வழியாக கடையம் நோக்கி புறப் பட்டது. இந்த யாத்திரையை மகாகவி பாரதியின் உறவினர் உமா பாரதி தொடங்கி வைத்தார். ஞாயிறன்று நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு சேவாலயா முரளிதரன் தலைமை வகித்தார். இதில் பிரபல ஓவியர் ஜெ.ஜெயராஜ், மரச்சிற்பி அப்பர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.