districts

அனைத்து வார்டுகளிலும் பல் மருத்துவமனை மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

சென்னை, ஜூலை 28 -

     அனைத்து வார்டுகளிலும் பல் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பி னர்கள் கோரிக்கை வைத்தனர்.

    சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் வெள்ளி யன்று (ஜூலை 28) ரிப்பன் மாளிகை யில் மேயர் ஆர்.பிரியா தலைமை யில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தொடங்கியதும், நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் அறிவித்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து மேயர் தீர்மானம் கொண்டுவந்தார். அதனை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரித்து பேசினர்.

     இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது, 38வது வார்டு உறுப்பினர் நேதாஜி கணேசன், சென்னையில் 16 நகர்ப்புற மருத்துவமனையில் மட்டுமே பல் மருத்துவர்கள் உள்ளனர்.  இதனை 200 வார்டுகளிலும் பல்  மருத்துவமனை அமைக்க வேண்டும்.  தொற்றுநோய் (காலரா) மருத்துவ மனையில் ஒரு தூய்மை பணியாளர்  கூட இல்லாத நிலை உள்ளது. தூய்மை  பணியாளர்கள் நியமிக்கப்படுவார் களா? என்று கேட்டார்.

    பல் மருத்துவமனை கோரிக் கையை ஆதரித்து துணை மேயர் மகேஷ்குமாரும் பேசினார். அவற்றிற்கு பதிலளித்த மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 16 நகர்ப்புற மருத்துவமனையில் பல் மருத்துவர்கள் உள்ளனர். இது  அனைத்து வார்டுகளிலும் விரிவுபடுத்த  சாத்திய கூறுகள் உள்ளனவா என  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

    ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில், அரசின் ஒப்புதல் பெற்று பல் மருத்துவமனை தொடங்கப் படும். மருத்துவமனைக்கு தேவை யான தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

    இந்த மன்ற கூட்டத்தில், மே தின  பூங்கா விளையாட்டு திடல், மயிலாப்பூர் முண்டக் கன்னியம்மன் கோவில்  உள் விளையாட்டு மைதானம்,  கோட்டூர் விளையாட்டு மைதானம், ஷெனாய் நகர் விளையாட்டு மைதானம், சேத்துப்பட்டு டோபிகானா ஆகியவற்றை 37.50 கோடி ரூபாய் செலவில் பெருநகர வளர்ச்சிக் குழுமம்  மேம்படுத்தும் பணிகளை செய்ய அனுமதி அளிப்பது உள்ளிட்ட 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.