திருவள்ளூர், செப்.18- திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவ தால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் 70 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு திறக்கப் பட்டுள்ளது. இதுவரை 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி சிகிச்சை வார்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது டெங்கு காய்ச்சலால் ஒரு சிறுமி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் டெங்கு அறிகுறிகளுடன் 37 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. திலகவதி கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாக விட்டால், பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், வாய், பல், ஈறு மற்றும் மூக்கில் இருந்து ரத்த கசிவு, வயிற்று வலி, மூச்சு விட சிரமம், மலம் கருப்பாக வெளியேறு தல், மயக்கம் ஏற்படுதல் என, இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடி யாக அரசு மருத்துவமனைக்கு வரவும். இங்கு, டெங்கு மற்றும் காய்ச்சலுக் கான ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டெங்கு மற்றும் காய்ச்சலை குணப்படுத்த தேவையான மருந்து, நரம்பு வழி வாயிலாக செலுத்தப் படும் மருந்து, திரவம், நிலவேம்பு கசாயம், ரத்த தட்டணுக்கள் குறைவு சரிசெய்ய, 24 மணி நேரமும் சிறப்பு பிரிவு இயங்கும். எந்த நேரத்திலும், டெங்கு பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.