districts

img

மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 26) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிண்டி-தாம்பரம் பகுதிக்குழு சார்பில் கிண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிண்டி பகுதிச் செயலாளர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் மா.சித்ரகலா, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் என்.ரமேஷ், அரசு ஊழியர் சங்க தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர்கள் த.முத்துக்குமாரசாமி வேல், மு.சாலக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.