மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிபிஎம் புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், ரவி, வேல்முருகன்(மதிமுக), சேரலாதன், சத்யமூர்த்தி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), தில்லைவளவன்(விசிக), சேகர், குப்புசாமி(சிபிஐ) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.