மணிப்பூரில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பில் ராயபுரத்தில் எம்.எஸ். ஜுகைப் தலைமையில் திங்களன்று (ஜூலை 31) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜ், ரெயின்போ விஜயக்குமார் (திமுக) ஏ.ஆர்.அப்துல் சமது (ஐஎன்எல்பி), எம்.முத்துராமலிங்கம் (மதிமுக), ஆர்.ரகுவளவன் (விசிக), எஸ்.ஐ.சாகுல் ரகுமான் (காங்கிரஸ்), ஏ.ஷாபூதீன் (எஸ்டிபிஐ), எஸ்.முஜீப் (மமக), த.கு.வெங்கடேசன் (சிபிஐ), எஸ்.பவானி, டி.வெங்கட், வி.பிரமிளா (சிபிஎம்) ஆகியோர் பேசினர்.