பயிற்சி முறையில் பணியிட மாறுதல் உருவாக்க வேண்டும், முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் வி.சிங்காரவேலு தலைமையிலும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் என்.காசிநாதன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.